Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ... திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா: கொடியேற்றத்துடன் துவக்கம் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
35 டன் எடையிலான யானை, குதிரை கற்சிலைகள்: அய்யனார்கோவிலில் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
35 டன் எடையிலான யானை, குதிரை கற்சிலைகள்: அய்யனார்கோவிலில் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

02 செப்
2021
04:09

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே புதுார் கிராமத்தில், யானை மேல் அழகர் அய்யனார் கோவிலில் 35 டன் எடையுள்ள யானை, குதிரை கற்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூர் கிராமத்தில்,  யானைமேல் அழகர் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டு பழமையான இக்கோவில் சிதிலமடைந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணிகளை கிராம மக்கள் துவக்கினர். இதில் 29 லட்சம் அறநிலையத்துறை சார்பிலும், மீதம் தொகை கிராம பொதுமக்கள் சார்பிலும் நிதிதிரட்டி சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில திருப்பணிகள் நடந்து வருகிறது. இக்கோவில் முழுவதும் கருங்கற்களை கொண்டது. இதில் 70 அடி நீளமும், 36 அடி அகலமும், 13 அடி உயரமும் கொண்ட மகா மண்டபத்தில், கலை நுட்பத்துடன் கூடிய 32 துாண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில், 27 லட்சம் மதிப்பீட்டில், கோவில் மகாமண்டப முகப்பில் இருபுறம் வைக்க, 50 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில், 23 டன் அளவுக்கு யானை சிலை, 11 அடி உயரத்திலும், 13 அடி நீளத்திலும் வடிவமைக்கப்பட்டது. அதே போல், 30 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில்,  12 டன் அளவில் குதிரை சிலையும், 11 அடி உயரமும், 13 அடி நீளத்திலும் வடிமைக்கப்பட்டது.

மேலும், கோவில் சுற்றுச்சுவரில் பக்தர்களை வரவேற்கும் வகையில் 6.5 அடி உயரத்தில் இரண்டு விளக்குடன் கூடிய பாவை கற்சிலையும், இதே போல் நான்கு அடி உயரத்தில் யானை பாகன் சிலையும் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலைகளை, திருப்பூரில் இருந்து பெரிய லாரியில்  கடந்த மூன்று நாட்களுக்கு முன் புறப்பட்டு ஒரத்தநாட்டுக்கு  நேற்று  மாலை கொண்டு வரப்பட்டது. பின்னர் மேள, தாளம் வானவேடிக்கையுடன், கடைவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் பலரும் வழியில் சிலைகளுக்கு மலர் தூவி வரவேற்று வழிபட்டனர். தொடர்ந்து இன்று(02ம் தேதி) காலை, கோயில் முகப்பில் அமைக்கப்பட்ட மேடையில், கிரேன் மூலம் இருச்சிலைகளும் பீடத்தில் பொறுத்தப்பட்டது. தொடர்ந்து இருச்சிலைகளுக்கும் பட்டு துணி அணிவித்து, மஞ்சள், குங்குமம் கொண்டு அபிஷேகம் நடத்தி தீபாரதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து சிலைகளை வடித்த சிற்பி மணி அவரது சகோதர்கள், புதுக்கோட்டை நமணசமுத்திரத்தைச் சேர்ந்த சிற்பி ஆ.முத்து  ஆகியோருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், பாராட்டி சிறப்பு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, எட்டாம் நாள் திருவிழாவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் முக்கிய திருவிழாக்களில் சித்திரை பெருவிழாவும் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில் கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ராமநவமி உற்சவ வைபவம் நடைபெற்றது.காரமடை அரங்கநாதர் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவில் காலபைரவர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar