Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ... சிவசாய் கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழா சிவசாய் கிருஷ்ணன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் பாண்டியர் காலத்து சதுஸ்த்ர லிங்கம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
மதுரையில் பாண்டியர் காலத்து சதுஸ்த்ர லிங்கம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

25 செப்
2021
07:09

மதுரை : மதுரை தெப்பக்குளம் - விரகனுார் வரை 60 அடி சாலை பணிக்காக ஐராவதநல்லுார் பகுதி கொந்தகை கால்வாய் அருகே ரோட்டை தோண்டும் போது கிடைத்த 2 அடி உயரமுள்ள சிவலிங்கம் பாண்டியர் கால சதுஸ்த்ர லிங்கம் என மதுரை அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் மருதுபாண்டியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சிலை ஐராவதநல்லுார் வி.ஏ.ஓ., சுரேஷ் மூலம் தெற்கு தாலுகா அலுவலகம் கொண்டு வரப்பட்டது. பின்னர் தாசில்தார் முத்துப்பாண்டி உத்தரவுபடி வருவாய் அதிகாரிகள் காந்தி மியூசிய வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். சதுஸ்த்ர வடிவ லிங்க வழிபாடு கி.பி., 10 - 11ம் ஆண்டுகளில் பாண்டியர் காலங்களில் இருந்துள்ளது. அதனால் இச்சிலை கி.பி., 11ம் நுாற்றாண்டின் பாண்டியர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். சிவலிங்க வழிபாடு என்பது சங்க இலக்கிய காலங்களிலேயே உள்ளது. துாண் வழிபாடு தான் பின்னர் லிங்க வழிபாடாக மாறியது. இதற்கு சான்றாக செங்கல்பட்டு மாவட்டம் நெட்ரம்பாக்கம் என்ற ஊரில் கிடைத்த லிங்கத்தில் தமிழி எழுத்துக்கள் உள்ளன. இதே போல் ஆந்திராவில் குடிமல்லம் என்ற ஊரில் கிடைத்த மிகப்பழமையான சிவலிங்கம் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது என்றார். முன்னதாக ஐவராவதநல்லுார் பகுதி மக்கள் லிங்கத்திற்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கள்ளழகருக்கு எதிர்சேவை: கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன், பக்தர்களின் கோவிந்தா ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: தமிழக பக்தர்கள் தங்குவதற்காக, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில், ஸ்ரீகாசி ... மேலும்
 
temple news
அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பெரிய தேரோட்டம், ஓம் நமசிவாய கோஷம் விண்ணதிர நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar