Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மண் பானையில் சோறு எடுத்து மழை வேண்டி ... சூலூரில் கோவில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை: பட்டாவில் தனிநபர்களின் பெயர்களை நீக்க மனு சூலூரில் கோவில் நிலங்களை மீட்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு: ஆய்வு நடத்த கோரிக்கை
எழுத்தின் அளவு:
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு: ஆய்வு நடத்த கோரிக்கை

பதிவு செய்த நாள்

27 செப்
2021
05:09

திருமங்கலம்: திருமங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 15-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி பானைகள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமங்கலம் ரெட்கிராஸ் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முருகேசன் நேற்று திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் இருந்து புளியங்குளம் செல்லும் பாதையில் உள்ள தனது நண்பரின் இடத்தில் உள்ள முட்களை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றுவதற்கான வேலையை செய்து வந்தார். அப்போது அந்த இடத்தில் வட்டவட்டமாக கருப்பு சிவப்பு பானை ஓடுகள் இருந்ததை பார்த்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். வருவாய் துறையினர் அந்த இடத்தை பார்த்தபோது சிறிதும் பெரிதுமாக 15க்கும் மேற்பட்ட பானைகள் உடைந்த நிலையில் சிதிலம் அடைந்து காணப்பட்டது.‌ அந்த இடம் பழங்கால மக்கள் வசித்தபோது அடக்கம் செய்யும் இடமாக இருந்ததா அல்லது மக்கள் வாழ்ந்த இடமா என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் முருகேசன் கூறும்போது : நேற்று காலை இந்த பகுதியில் சுத்தம் செய்வதற்காக வந்தபொழுது வட்ட வட்டமாக பானை போன்று புதைந்து கிடந்ததை பார்த்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தேன். சமீபத்தில் மதுரை கீழடி, கிண்ணிமங்கலம் பகுதிகளில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம், தமிழர் வரலாறு குறித்து தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில், இந்த இடத்தையும் தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar