Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி ... மைசூரு தசரா விழா இன்று கோலாகலத்துடன் துவக்கம் மைசூரு தசரா விழா இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மண்டல பூஜை செயல் திட்டம் வகுத்தது அரசு
எழுத்தின் அளவு:
சபரிமலை மண்டல பூஜை செயல் திட்டம் வகுத்தது அரசு

பதிவு செய்த நாள்

07 அக்
2021
10:10

திருவனந்தபுரம்:சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாத மண்டல பூஜையின் போது, பக்தர்கள் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை 1ம் தேதி மண்டல பூஜைகள் துவங்கி, ஜனவரியில் மகர ஜோதி முடியும் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.கொரோனா பரவல் காரணமாக, பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனம் செய்ய கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் 16ல் துவங்குகிறது. இதையொட்டி செய்யப் பட்டு உள்ள ஏற்பாடுகள்குறித்து, தேவஸ்வம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேற்று மாநில சட்டசபையில் கூறியதாவது:பம்பா, எருமேலி உள்ளிட்ட இடங்களில் மருத்துவமனை மற்றும் தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்குவது தொடர்பாக, சுகாதாரம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து செயல் திட்டத்தை வகுத்துள்ளனர். தற்போது உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மற்றும் ஒரு நாளில் எத்தனை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்பது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும். மண்டல பூஜைகள் துவங்கி இரண்டு மாதங்களுக்கு பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி, போக்குவரத்து, கழிப்பறை உள்ளிட்டவை குறித்து, தேவஸ்வம் வாரியத்துடன் துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்தி வருகின்றனர்.பக்தர்கள் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி; செப்டம்பர் 07-ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,07ம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; காணை கிராமத்தில் நவதானியங்களால் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழி ... மேலும்
 
temple news
கூடலூர்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி ... மேலும்
 
temple news
குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar