Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உச்சையனூர் நஞ்சுண்டேஸ்வரர் ... உத்திரமேரூர் சிவன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
03:10

கரூர் : கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது .கல்யாண பசுபதீஸ்வர்ர் என்கின்ற ஆநிலையப்பர், திருநாகேஸ்வரர், காரியமாலீஸ்வரர் அன்னத்தினால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்

கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவருக்கு நடைபெற்ற அன்னாபிஷேகத்தினை தொடர்ந்து இங்குள்ள காரியமாலீஸ்வரர், திருநாகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கும் அன்னாபிஷேக நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் அன்னத்தினால் அலங்கரிக்கப்பட்ட ஈஸ்வரன்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும், அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்பது இன்றும் ஐதீகமாக கூறப்படுகின்றதால், பக்தர்கள் பெருமளவில் கோயிலில் குவிந்து அன்னத்தினால் அலங்காரம் செய்யப்பட்ட ஈஸ்வரனை தரிசித்து கடவுள் அருள் பெற்றனர். மேலும், இதனை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு எட்டு மணியளவில் ஆராதனைகள் நடைபெறும்.

பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு எட்டு மணியளவில் அன்னாபிஷேக அலங்காரம் பிரிக்கப்பெற்று, சிவலிங்கத் திருமேனிமேல் சார்த்தப்பெற்ற அன்னத்தையும், காய்கறிகளையும், வடைமாலையையும் அர்ச்சகர் தனது தலைமேல் கூடையில் சுமந்து கொண்டு தீவட்டி, மேளதாளத்துடன், பக்தர்கள் சிவபுராணம் பாடிய வண்ணம் அல்லது அரஹர, சிவசிவ என நாமம் சொல்லிய வண்ணம் அருகில் உள்ள ஓடும் நீர் நிலைகளிலோ அல்லது ஆலயத் திருக்குளத்திலோ சென்று அதனை நீரில் கரைத்து தீபாராதனை செய்வார்கள். இதன் மூலம் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங் களுக்கும் கூட இறைவன் படியளப்பதாக ஐதீகம் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றியுள்ள அன்னத்தை தயிர் சாதமாக்கிப் பிரசாதமாக வழங்குவார்கள் குறிப்பாக குழந்தைப் பேறு வேண்டுவோர் இந்த அன்னத்தை உண்பதன் மூலம் நல்ல குழந்தைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை. அன்னாபிஷேகம் செய்வதால் நல்ல மழை பெய்து நல்ல முறையில் விவசாயம் நடைபெறும் எனவும், உணவுப் பஞ்சம் ஏற்படாது எனவும் வேதங்கள் தெரிவிக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar