Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘ஓம் நமசிவாய’ கோஷத்துடன் தை மாத ... தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது? பழநியில் பக்தர்கள் குவிவது ஏன்? தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது? ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூச திருவிழா திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில் ஐந்து தேரோட்டம்
எழுத்தின் அளவு:
தைப்பூச திருவிழா திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில் ஐந்து தேரோட்டம்

பதிவு செய்த நாள்

31 ஜன
2026
03:01

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது.  இக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜன.23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று வரை சுவாமிகள் பல்வேறு வாகனத்தின் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று (ஜன.31) அதிகாலை 3:30 மணிக்கு மேல் 4;30 மணிக்குள் பஞ்சமூர்த்தி சுவாமிகளான மகாலிங்க சுவாமி, பெருநலமாமுலையம்மை அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் தனித்தனி திருத்தேரில் எழுந்தருளினர். பிறகு தேரில் சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து நாளை (பிப்.1 தேதி) காலை 10:30 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷபா வாகனத்தில் காவிரி ஆற்றுக்கு எழுந்தருளி மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள் தைப்பூச தீர்த்தவாரியும், இரவு வெள்ளி ரத காட்சி நடைபெறுகிறது.

பிறகு (பிப்.2ம் தேதி ) சந்தாவர்ணம், சுவாமி அம்பாள் திருவீதியுலா, 3ம் தேதி சக்தி உற்சவம், 4ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் திருவீதியுலா,5ம் தேதி  ஆச்சார்யா உற்சவம், சர்வ பிராய சித்தாபிஷேகம், பஞ்சமூர்த்திகள் பிரவேசம் நடைபெறுகிறது. இதை போல், தைப்பூசத்தையொட்டி ஆறுபடை வீடுகளுள் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றப்பட்டன. தொடர்ந்து இன்று உள்பிரகார திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரில் வள்ளி-தேவசேனா உடனாய சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் காட்சியளித்தனர் இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து நாளை (பிப்.1 தேதி) சுவாமிகள் திருவீதியுலாவாக சென்று காவிரி ஆற்றில் தீர்த்தவாரி, இரவு அவரோகணம், படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலா, நாளை மறுநாள் (பிப்.2ம் தேதி) இரவு சுவாமிகள் யதாஸதானம் சேருதல் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar