ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வெங்கடேசப்பெருமாள் கோயிலில் ஐப்பசி முதல் சனிக்கிழமை கருடசேவை நடந்தது. ஆழ்வார் குறிச்சி கீழகிராமத்தில் வெங்கடேசப்பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடபகவான், ஆஞ்சநேயர், கிருஷ்ணன், நரசிம்மர் உட்பட பரிவாரமூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். இங்கு நடந்த ஐப்பசி மாத முதல் சனிக்கிழமை கருடசேவை விழாவில் கட்டளைதாரர் ஆழ்வார்குறிச்சி வசந்தா ஆறுமுகம் குடும்பத்தினர் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரத்தில் தீபாராதனையை சம்பத்குமார் ஐயங்கார் நடத்தினார். இரவு பெருமாள் கருடவாகனத்தில் அருள்பாலித்தலும், கோயில் உட்பிரகாரத்தில் எழுந்தருளலும் தீபாராதனையும் நடந்தது.