பதிவு செய்த நாள்
27
அக்
2021
12:10
கடையநல்லுார்: கடையநல்லுார் கரடி மாடசாமி கோயில் ஐப்பசி பெருங்கொடை விழாவை முன்னிட்டு நேற்று மாலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
விஷ்ணு பகவானின் 9 அவதாரங்களில் வராஹ அவதாரத்துடன் பிரசித்தி பெற்ற கோயிலாக கடையநல்லூர் கரடிமாடசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காக்கும் விநாயகர், லட்சுமி வராஹமூர்த்தி, அபயஹஸ்த ஆஞ்சநேயர், துர்காகாளி, பரமேஸ்வரர், பரமேஸ்வரி, முத்தாலம்மன், சப்தமாதாக்கள், கருடாழ்வார், ஸ்ரீராம்கரடி உள்ளிட்ட சுவாமிகளும் இடம் பெற்றுள்ளனர். கடையநல்லூர் கரடிமாடசாமி கோயில் ஐப்பசி கடந்த 19ம்தேதி காப்பு கட்டும் வைபவத்துடன் துவங்கியது. 20 ம்தேதி மஞ்சனை அலங்காரம்,21ம்தேதி காய்கனி அலங்காரம், 22 ம்தேதி அன்னாபிஷேகம், 23ம்தேதி லட்டு அலங்காரம், 24ம்தேதி திருவிளக்கு பூஜை, பழ அலங்காரம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி தீபாராதனை நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (25ம்தேதி) அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு மகா அபிஷேகம், ஆராதனை, மதியம் 3 மணிக்கு பால்குடம் திருவீதி உலா, இரவு 7மணி பால் அபிஷேகம், இரவு 8மணிக்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது. விழாவில் சிறப்பு பெற்ற தீர்த்தக்குடம் ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.