பதிவு செய்த நாள்
27
அக்
2021
01:10
நாமக்கல்: தமிழ் மாதம் முதல் ஞாயிறை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாமக்கல் ஆஞ்சநேயர் ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அங்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, தமிழ், ஆங்கில, தெலுங்கு வருட பிறப்புகள், அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட பல்வேறு விழாக்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் நேற்று ஐப்பசி மாத முதல் ஞாயிறு அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 5:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டது. நல்லெண்ணெய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.