Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோலைமலை முருகன் கந்தசஷ்டி விழா: ... சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களின்றி வழிபாடு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் கந்தசஷ்டி விழா : பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பழநியில் கந்தசஷ்டி விழா : பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பதிவு செய்த நாள்

03 நவ
2021
11:11

பழநி: பழநியில் நாளை (நவ.4ல்) தீபாவளி அன்று துவங்கும் கந்த சஷ்டி விழா விற்கு பக்தர்கள் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழநி மலைக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா நடைபெறும். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவிழா உற்சவம் நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கந்தசஷ்டி விழாவின் முதல் நாளான நாளை(நவ.4ல்) மலைக்கோயிலில் உச்சிகால பூஜையில் காப்புக் கட்டும் நிகழ்வு நடைபெறும். அதன்பின் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

நவ.5 முதல் நவ.11 வரை தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். மண்டகப்படிக்கு பக்தர்கள் அனுமதி இல்லை. மண்டகப்படிகள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும். பழநி மலைக்கோயில் கிரி வீதியில் சூரசம்ஹாரம் நடைபெறும் நாளான நவ.9 அன்று, பகல் 11.00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதன்பின் பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை, பகல் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை, பகல் 2:45 மணிக்கு மேல் மலை கோயிலில் வேல் வாங்குதல் நடைபெறும். அதன்பின் சன்னதி திருகாப்பிடப்படும். மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி புறப்பட்டு கிரிவீதி வந்தடைவார். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சாமி மங்கம்மாள் மண்டபம் வந்தடைவார். மாலை 6:00 மணிக்கு மேல் நான்கு கிரிவீதிகளிலும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். இரவு 9:00 மேல் கோயில் சார்பாக வெற்றி விழா நடைபெறும். மலைக்கோயிலில் சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டு ராக்கால பூஜை நடைபெறும்.

திருக்கல்யாணம் : நவ.,10 அன்று பகல் 12:30 வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. காலை 9.0 மணிக்கு மேல் 10 மணிவரை மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பகல் 12:30 பின் வழக்கம்போல் மலைக் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை4:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்க படுவர். மாலை 6.30 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். உற்சவத்தில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் மட்டும் கலந்து கொள்வர். பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. மேலும் சூரசம்கார நிகழ்வும், திருக்கல்யாண நிலையும் யூடியூப் சேனல் மற்றும் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய திருக்கோவில் நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்தும் திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்ய திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் அறிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar