நத்தம் மாரியம்மன் கோவிலில் பூக்குழி கண் திறக்கும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2026 08:03
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழாவில் பூக்குழி கண் திறக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நத்தம் மாரியம்மன் கோயிலில் கடந்த பிப். 23-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்து வருகிறது. இதில் நேற்று காலை பூக்குழி பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது.தொடர்ந்து கோவிந்தா கோஷம் முழங்க கோவில் முன்பாக பூக்குழி கண்திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.