Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் கந்த சஷ்டி விழா: நாளை ... முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி விழா முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலூர் சிவன் கோவில் திருப்பணிகள் தாமதம் பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
சூலூர் சிவன் கோவில் திருப்பணிகள் தாமதம் பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

08 நவ
2021
02:11

சூலூர்: சூலூர் சிவன், பெருமாள் கோவில் திருப்பணிகள் தாமதமாவதால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில், சின்னக்குளத்தை ஒட்டி, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவிலும், பெரிய குளத்தை ஒட்டி, ஸ்ரீ தேவி பூதேவி சமேத திருவேங்கட நாத பெருமாள் கோவிலும் உள்ளன. பல நூறாண்டுகளுக்கு மேலான, பழமையான இக்கோவில்கள் சூலூரின் அடையாளமாக உள்ளன. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில்களுக்கு, பல நூறு ஏக்கர் பூமிகள் உள்ளன. கோவில்களில் நடக்கும் விழாக்களில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இரு கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பல ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால், கோவில் கோபுரங்கள், பிரகார தளங்கள் பொலிவிழந்து உள்ளதால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: சூலூரில் உள்ள சிவன் கோவில், பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது. சிவன் கோவிலிலில் கோபுரங்களில் வண்ணங்கள் பொலிவிழந்து விட்டன. ஆங்காங்கே தளங்கள் பெயர்த்துள்ளன. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. பெருமாள் கோவிலிலும் இதே நிலை உள்ளது. சிவன் கோவில் திருப்பணிகளுக்கு ரூ. 20 லட்சமும், பெருமாள் கோவில் திருப்பணிகளுக்கு, ரூ. 37 லட்சம் அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், திருப்பணிகள் தொடங்குவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. எப்போது துவங்குவார்கள் எனத்தெரியவில்லை. இதனால், சுற்றுவட்டார பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். விரைந்து திருப்பணிகளை துவக்கி, கும்பாபிஷேகத்தை நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பக்தர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar