Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்காளஹஸ்தி கோயிலில் 13ம் தேதி ... விஸ்வேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம் விஸ்வேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் பக்தர்கள் ஆரவாரம் இன்றி சூரனை வதம் செய்தார் சுவாமி
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் பக்தர்கள் ஆரவாரம் இன்றி சூரனை வதம் செய்தார் சுவாமி

பதிவு செய்த நாள்

10 நவ
2021
11:11

திருச்செந்துார்: ஆணவம் அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் பக்தர்களின்றி நடந்து முடிந்தது.
திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கந்தசஷ்டி விழா கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை1:00 மணிக்கு திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளியதும் யாகசாலை பூஜைகள் நடந்தன.

யாகசாலையில் பூர்ணாகுதி தீபாராதனை ஆனதும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. கோயிலில் மூலவருக்கு காலை9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி 108 வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் 108 மகாதேவர் சன்னதி முன் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதன் பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். மதியம் 2:30 மணிக்கு சூரபத்மன் சிவன் கோயிலிருந்து நேரடியாக கோயில் கடற்கரைக்கு புறப்பட்டான். மாலை 5 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. முதலில் கஜமுக சூரன் முருகப்பெருமானுடன் போரிடும் நிகழ்ச்சி நடந்தது. முருகப்பெருமான் தனது வெற்றி வேலால் சரியாக 5.13மணிக்கு வீழ்த்தினார். அதனை தொடர்ந்து சிங்கமுகமாக உருவெடுத்து சுவாமி ஜெயந்திநாதரிடம் போரிடும் நிகழ்ச்சி நடந்தது. மாலை5.22 மணிக்கு தனது வெற்றி வேலால் சிங்கமுக சூரனைவென்றார். மூன்றாவது சூரன் தனது சுயரூபத்துடன் சூரபத்மனாக மாறி சுவாமி ஜெயந்திநாதரிடம் போர் புரிந்தான். மாலை 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் தனது வெள்ளி வேலால் வதம் செய்தார். பின்னர் சேவல் மாமரமாக மாறி சுவாமி ஜெயந்திநாதரிடம் போர் செய்தான். கருணை கடவுளான செந்திலாண்டவர்சூரனை சேவலாகவும், மாமரமாகவும் தனக்குள் ஆட்கொண்டார். ஆணவம் அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் சூரசம்ஹாரம் விழா நிறைவு பெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் 108 மகாதேவர் சன்னதியில் எழுந்தருளியதும் சாயாபிஷேகம் எனப்படும் கண்ணாடி பிம்பத்தில் நிழல் அபிஷேகம் நடந்தது.சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வில்லை. ஏற்பாடுகளைகோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணைஆணையர்(பொறுப்பு) குமரதுரை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar