Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிறந்தது கார்த்திகை .. சபரிமலை நடை ... சபரிமலையில் தொடங்கியது மண்டலகாலம்: 41 நாட்கள் தொடர்ந்து பூஜைகள் சபரிமலையில் தொடங்கியது மண்டலகாலம்: 41 ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் மண்டலகாலம் தொடங்கியது: பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மண்டலகாலம் தொடங்கியது: பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

16 நவ
2021
10:11

சபரிமலை : மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று(நவ.,16) முதல் கட்டுப்பாடுகளுடன் 41 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறும்.

கார்த்திகை 1ம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறுவது மண்டல கால பூஜை. கேரளாவில் இன்று கார்த்திகை பிறக்கிறது. இதற்காக நேற்று மாலை 5:00 மணிக்கு பதவிகாலம் நிறைவு பெறும் மேல்சாந்தி ஜெயராஜ்போற்றி நடை திறந்து தீபம் ஏற்றினார். 18- படி வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்த பின் அங்கு இருமுடி கட்டுடன் வந்திருந்த புதிய மேல்சாந்தி சபரிமலை- பரமேஸ்வரன் நம்பூதிரி, மாளிகைப்புறம்- சம்பு நம்பூதிரி ஆகியோரை கைபிடித்து கோயில் முன்புறம் அழைத்து வந்தார். இரவு 7:00 மணிக்கு ஜெயராஜ் போற்றிக்கு அபிஷேகம் நடத்திய தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரரு, ஐயப்பன் மூலமந்திரம் சொல்லி கொடுத்து கோயிலுக்குள் அழைத்து சென்றார். இதுபோல மாளிகைப்புறம் கோயில் முன்பும் சம்புநம்பூதிரிக்கு அபிஷேகம் நடத்தி கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். வேறு பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 4:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் ஆரம்பமாகியது. தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகம் தொடங்கி வைத்தார். இந்த சீசனிலும் பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்ய செல்ல முடியாது. பக்தர்களிடம் நெய் பெற்ற பின் அதை தேவசம்போர்டு ஊழியர்கள் கொண்டு சென்று அபிஷேகத்துக்கு கொடுப்பார்கள். இதற்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை. தீபாராதனை, அத்தாழ பூஜை ஆகியவற்றுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும். இன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். தற்போது பத்தணந்திட்டையில் பெருமழை பெய்து வருவதால் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு குறைந்த பின் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். மலை ஏறவும், இறங்கவும் சுவாமி ஐயப்பன் ரோடு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். சன்னிதானத்தில் தங்க முடியாது. முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்கு நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவுடன், உரிய சான்றிதழுடன் செல்லும் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர். பத்தணந்திட்டை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக சபரிமலை செல்லும் வாகனங்கள் பல இடங்களில் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar