மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சோம வார வழிபாடு நடந்தது.அதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு முதல் கால வழிபாடு நடந்தது. 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மதியம் 12:00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின், மூலவர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.