Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வலம்புரி விநாயகர் கோவில் ... அலங்காநல்லூரில் 38 ம் ஆண்டு உற்சவ விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் வழிபாடு செய்தால் உடம்பிற்கு புத்துணர்ச்சி: மதுரை ஆதீனம் பேச்சு
எழுத்தின் அளவு:
கோயில்களில் வழிபாடு செய்தால் உடம்பிற்கு புத்துணர்ச்சி: மதுரை ஆதீனம் பேச்சு

பதிவு செய்த நாள்

10 டிச
2021
05:12

மானாமதுரை: கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும் என்று மதுரை ஆதீனம் தஞ்சாக்கூரில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பேசினார்.

மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு மதுரை ஆதீனம் பேசியதாவது: தமிழகத்தில் நமது முன்னோர்கள் தினந்தோறும் கோயில்களுக்குச் சென்று தங்களது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருந்தனர்.அதேபோல் தற்போது நாமும் தினந்தோறும் கோயில்களுக்குச் சென்று உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் தற்போது பலர் தினந்தோறும் அலைபேசிக்கு தான் சார்ஜ் ஏற்றுகின்றனர். உடலுக்கு சார்ஜ் ஏற்ற கோயில்களுக்கு செல்வதில்லை. தற்போது டி.வி., அலைபேசி மற்றும் மின்சார பொருள்களுக்கு கியாரண்டி உண்டு, அதேபோல் ஒரு வேட்டி சேலை வாங்கினால் கூடுதலாக இலவசமாக நான்கு வேட்டி சேலைகள் கூட கொடுக்கின்றனர், ஆனால் இந்த மனித உடலுக்கு நிரந்தரம் என்று எதுவும் உள்ளதா , ஆகவே மனிதர்கள் இருக்கின்ற காலத்தில் நல்ல செயல்களை செய்ய வேண்டும். மனிதர்கள் தற்போது தங்களது உடலை அழகுபடுத்த அழகு நிலையங்களில் அதிக நேரம் ஒதுக்குகின்றனர்.ஆனால் இறை வழிபாட்டுக்கு என்று நேரம் ஒதுக்குவது கிடையாது. தமிழகத்தில் பண்பாடு,கலாச்சாரம் போன்றவை கிராமங்களில்தான் உள்ளது.

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் கடைகளை குத்தகைக்கு எடுத்து வாடகை கொடுக்காதவர்கள் அல்லது கோயிலுக்கு உண்டான கடனை செலுத்தாதவர்கள் உடனடியாக கொடுத்துவிடுங்கள் அப்படி இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ, பெருச்சாளியாகவோ, மூஞ்சிறுவாகவோ பிறக்க நேரிடும். அதைப்போல சிவன் சொத்து குலநாசம் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும் என்றும் பேசினார். விழாவில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை செயலாளர் ஜெயகாந்தன், கோயில் பூசாரி பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar