Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருப்பாவை சொற்பொழிவு ஸ்ரீரங்கம் ராப்பத்து 3ம் நாள்: சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் ராப்பத்து 3ம் நாள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் தெப்பக்குளங்கள் புனரமைப்பு; உயர்நீதிமன்றம் அவகாசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2021
06:12

மதுரை : கோயில்களுக்குச் சொந்தமான தெப்பக்குளங்களை புனரமைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 2 மாதம் அவகாசம் அளித்தது.ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான தெப்பக்குளங்கள் மாசடைந்துள்ளன. முறையாக அறநிலையத்துறை பராமரிக்கவில்லை.கோயில் தெப்பக்குளங்களை புனிதமாகக் கருதி மதுரை, திருக்கோஷ்டியூர் உட்பட பல கோயில்களில் தெப்பத்திருவிழா நடக்கிறது.அனைத்து ஹிந்து கோயில்களிலும் உள்ள தெப்பக்குளங்களில் கழிவு நீர் கலப்பது, குப்பைகளை குவிப்பதை தடுக்க வேண்டும்.

மாசுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். தெப்பக்குளங்களை புனரமைத்து, பராமரிக்க தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் குறிப்பிட்டார்.ஏற்கனவே விசாரணையில் நீதிபதிகள், கோயில்களின் தெப்பக்குளங்களை துாய்மைப்படுத்த, ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஆழப்படுத்த, மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு வழிகாட்டுதல் பிறப்பித்துள்ளது. இதில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.அறநிலையத்துறை தரப்பு: அறநிலையத்துறையின் கீழ் 1586 கோயில்களுக்குச் சொந்தமாக 2359 தெப்பக்குளங்கள் உள்ளன. இவற்றில் 1291 குளங்கள் நல்ல நிலையில் உள்ளன. 1068 குளங்களைப் பொருத்தவரை தண்ணீர் நிரம்பியபோதிலும் படிக்கட்டுகள், மதிற்சுவர்கள் சிதிலமடைந்திருந்தன. இவற்றில் 911 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. 37 குளங்களில் திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சீரமைக்க வேண்டிய குளங்களை சரி செய்ய சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் 2 மாதங்கள் அவகாசம் கோரப்பட்டது. இதை அனுமதித்த நீதிபதிகள் 2 மாதங்களுக்கு ஒத்திவைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar