Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் நாயகி சுவாமி ... மதுரை வெள்ளியம்பலத்தில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம் மதுரை வெள்ளியம்பலத்தில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்: புதிய சந்தனக்காப்பில் மரகத நடராஜர் தரிசனம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்: புதிய சந்தனக்காப்பில் மரகத நடராஜர் தரிசனம்

பதிவு செய்த நாள்

20 டிச
2021
12:12

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் நடந்த ஆருத்ரா தரிசனத்திற்கு பிறகு மரகத நடராஜருக்கு புதிய சந்தனகாப்பு அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற சிவாலயமாகும். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா டிச.,11 இல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அபூர்வ பச்சை மரகத நடராஜருக்கு தனி சன்னதி உண்டு. ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை 8 மணி அளவில் துவங்கியது. .சந்தனம் படி களையப்பட்ட மரகத நடராஜரின் தரிசனத்தை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்திருந்தனர். ஆருத்ரா மகா அபிஷேகம், விசேஷ தீபாராதனை நிறைவேற்றப்பட்டது.

இன்று அதிகாலை 4 மணியளவில் அருணோதய காலத்தில் பச்சை மரகத நடராஜருக்கு புதிய சந்தனக் காப்பு இடப்பட்டு சர்வ மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் அருகில் உள்ள கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான், மாணிக்கவாசகர் எழுந்தருளினர். உற்ஸவ மூர்த்திகளின் உள் பிரகார வீதிஉலா நடந்தது. முற்பகலில் மரகத நடராஜருக்கு வேத மந்திரங்கள் முழங்க விசேஷ தீபாராதனை செய்யப்பட்டு நடை சாத்தப்பட்டது. வருடம் முழுவதும் சந்தனக் காப்பு இடப்பட்டு ஆருத்ரா தரிசன நாள் மட்டுமே சந்தனம் களையப்படும், அபூர்வ நிகழ்வு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar