Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி மண்டல உற்ஸவம் கொடியேற்று ... அய்யப்ப பக்தர்களுக்கு முஸ்லிம்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண் குழந்தைகள் பராசக்தியின் வடிவம்: கோவை காமாட்சிபுரி ஆதீனம் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2021
03:12

கோவை: கோவை மாநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சமுதாய நல்லிணக்கம் சார்பில், கன்யா பூஜை விழா, ராமநாதபுரம், எஸ்.என்.அரங்கில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் சமுதாய நல்லிணக்க மாநில அமைப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்.கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கன்யா பூஜையை நடத்தி வைத்து பேசியதாவது:கோவையில் கன்யா பூஜை நடப்பது இதுவே முதல் முறை. பெண் குழந்தைகள் பராசக்தியின் வடிவம். ஐந்து வயது முதல், 12 வயது வரை உள்ள பெண் குழந்தைகளை, பராசக்தியாக நினைத்து பூஜை செய்து வழிபடுவதுதான் கன்யா பூஜையாகும்.இந்த பூஜை, இந்துகளின் பாரம்பரியத்தில் காலம் காலமாக நடத்து வந்த பூஜைதான். இடையில் இதை பின்பற்றாமல் விட்டு விட்டனர். இனி எல்லா இடங்களிலும் கன்யா பூஜை நடத்தப்பட வேண்டும்.பல ஆண்டுகளுக்கு பிறகு, காசியில் விஸ்வநாதர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இருப்பதால், இந்துகளிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த எழுச்சி, இந்தியாவின் அனைத்து பகுதியிலும் ஏற்பட வேண்டும். அதற்கு இது போன்ற பூஜைகள் தொடர்ந்து நடக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஆனந்த வேதாஸ்ரமம் ஈஸ்வரன் குருஜி, விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் தங்கவேல், லட்சுமண நாராயணன், அமர்நாத் சிவலிங்கம், மாவட்ட தலைவர் சிவலிங்கம், செயலாளர் விஷ்ணுராஜா பொருளாளர் ஹரி ராமசாமி, அமைப்பாளர் ஸ்ரீனிவாசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar