Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிறர் கொண்டாடும் படி வாழ வேண்டும் குறிஞ்சேரி ஆண்டாள் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு குறிஞ்சேரி ஆண்டாள் கோவிலில் மார்கழி ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
மனதில் உள்ள பக்தியை மட்டுமே இறைவன் பார்க்கிறார்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம்
எழுத்தின் அளவு:
மனதில் உள்ள பக்தியை மட்டுமே இறைவன் பார்க்கிறார்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம்

பதிவு செய்த நாள்

21 டிச
2021
12:12

புதுச்சேரி-அர்ப்பணிக்கும் பொருட்களை இறைவன் பார்ப்பதில்லை;மனதில் பக்தி உள்ளதா என்று தான் பார்க்கிறார் என, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் கூறினார்.

புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், மார்கழி மாதத்தையொட்டி, திருப்பாவை சிறப்பு சொற்பொழிவு கடந்த 16ம் தேதி துவங்கியது. வரும் ஜனவரி 12ம் தேதி வரை நடக்கும் இந்த சொற்பொழிவில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் தினமும் காலை 7:00 மணி முதல், 8:30 மணி வரை உபன்யாசம் செய்து வருகிறார்.நேற்றைய ஐந்தாம் நாள் உபன்யாசத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் பேசியதாவது:திருப்பாவை ஐந்தாம் பாசுரத்தில் எளிமை, பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற இறைவனின் ஐந்து நிலைகளில் ஐந்தாவதுதான அர்ச்சாவதாரம் குறித்து சொல்லப்படுகிறது. இறைவனை அடையும் வழிகள், அடைய வேண்டிய பொருள், அடைவதால் கிட்டும் பயன் ஆகியவற்றை ஆண்டாள் இந்த பாசுரத்தில் உள்ளுரை பொருளாக சொல்லி யுள்ளார்.இதேபோல் இப்பாசுரத்தில் துாமலர் என்று ஆண்டாள் அருளியுள்ளதை கவனிக்க வேண்டும். எல்லா மலர்களும் இறைவனுக்கு உகந்தவையாயினும், சில மலர்கள், சில காரணங்களுக்கு விசேஷம் உண்டு. அப்படிப்பட்ட மலர்களை கொண்டு இறைவனை அர்ச்சித்தால் விசேஷ உகப்பு அவருக்கு ஏற்படும்.சில மலர்கள் வாசனையால் விசேஷ மேன்மை பெற்றவை. மல்லிகை, மனோரஞ்சிதம் போன்ற மலர்கள் காந்தம், ரூபம் என்ற இரண்டு ஆகாரத்தாலும் மேன்மை பெற்றவை. இந்த மலர்களைவிட கருநெய்தல் மலர் சிறந்தது. கருநெய்தல் மலரைவிட தாமரை சிறந்தது. அந்த தாமரையில் நுாறு இதழ் தாமரை சிறந்தது.நுாறு இதழ் தாமரைவிட ஆயிரம் இதழ் தாமரை சிறந்தது. ஆயிரம் இதழ் தாமரைவிட வெண்தாமரை மேலானது. ஆயிரம் வெண்தாமரைவிட ஒரு துளசிதளம் மேலானது. துளசியைவிட கொக்கு மந்தாரை மேலானது. கொக்கு மந்தாரையைவிட சுவர்ண புஷ்பம் சிறந்தது. அதை பகவானுக்கு கொடுப்பது போன்று வேறொன்றும் கிடையாது.இந்த மலர்கள் கண்ணால் பார்க்கப்படும் புஷ்பங்கள். நாம் ஊனக் கண்ணால் காண முடியாத சாத்திரங்களை கொண்டே அறிய வேண்டிய புஷ்பங்கள் சில உண்டு. அவற்றில், அகிம்சை, சத்தியம், தியானம், தபஸ் உள்ளடக்கம். இந்த புஷ்பங்களை கொண்டு அர்ச்சித்தால் இறைவன் மிக மிக சந்தோஷமடைவார். இருப்பினும் இறைவன் நாம் அவனிடம் அர்ப்பணிக்கும் பொருட்களை பார்ப்பதில்லை; மனதில் பக்தி உள்ளதா என்று தான் பார்க்கிறார்.இவ்வாறு, ராமபத்ரன் பேசினார்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar