Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு அலங்காரத்தில் காரமடை ... பழநி பக்தர்களுக்கு அன்னதானம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2 ஆண்டுகளில் மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: முதல்வர் ஸ்டாலின்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
06:01

சென்னை: மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில், மதுரையில் ரூ.49.74 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.51.77 கோடி மதிப்பு புதிய திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சங்க கால நகராக இருந்து மதுரையை, நவீன மதுரையாக தி.மு.க., அரசு மாற்றியது. தி.மு.க., ஆட்சியில் பல பாலங்கள் கட்டப்பட்டன. பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மதுரையை மேம்படுத்த வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிக்க 14 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.

மதுரையில் ரூ.500 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படும். சிறைச்சாலை மாநகராட்சி பகுதிக்கு வெளியே மாற்றப்படும். மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் புதிதாக மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாராகிறது. ரூ.114 கோடி செலவில் கலைஞர் நூலகம் அமைய உள்ளது. ரூ.25 கோடியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். 2ஆண்டுகளில் மீனாட்சி கோயிலுக்கு குடமுழுக்கு ஏற்படுத்தப்படும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை காண நிரந்தரமாக நவீன அரங்கம் அமைக்கப்படும். மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சை மையமும் நவீன அரங்கத்தில் இடம்பெறும்.342.33 கோடி மதிப்பு பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மக்களின்தேவையை கண்டறிந்து செயல்படும் அரசாக திமுக அரசு இருக்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar