கடலுார்: வசந்தராயன்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது.
கடலுார் துறைமுகம் அடுத்த வசந்தராயன்பாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. மதியம் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, வசந்தராயன்பாளையம் மயானத்திற்கு சாமி புறப்பாடு நடந்தது. அங்கு மேள, தாளங்கள் முழங்க மயானக்கொள்ளை விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.