ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள அங்காளம்மன் கோவில் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் விழாவில் நேற்று முன்தினம் மாலை தீமிதி உற்சவம் நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று தேர்திருவிழா நடந்தது.
இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து வருகின்ற 24ம் தேதி வரை தினமும் இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.