அன்னூர்: மகா பைரவர் கோவிலில் ஜென்மாஷ்டமி விழா நடந்தது. மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன் புதூரில் பிரசித்தி பெற்ற மகா பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அபிஷேக பூஜை நடந்தது. பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 8:00 மணிக்கு அலங்கார பூஜையும், இதையடுத்து, அன்னதானம் வழங்குதலும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர், மகா பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.