பதிவு செய்த நாள்
29
ஜன
2022
03:01
தஞ்சாவூர்: திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவிலில், 9வது ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. .
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஒன்பது ஆண்டான வருஷாபிஷேகம் நடந்தது.
அதனை முன்னிட்டு, ஆதி விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகமும், ஆட்கொண்டாருக்கு வடை மாலையும் சாத்தப்பட்டன. பின்னர், பிரகு மகா ருத்ர ஹோமம் ஆரம்பிக்கப்பட்டு திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஐயாறப்பர், அம்பாள், தர்மசம்வர்த்தினி உள்ளிட்ட உற்சவர் சிலைக்கு பால், தேன், மஞ்சள் ,சந்தனம், தயிர், திரவிய பொடி கொண்டு அபிஷேகம் செய்து. புனித நீர் ஊற்றப்பட்டது. மேலும், மகா ருத்ர ஹோமத்தில் வஸ்திரம், நெய், பூர்ணாஹுதி, மந்திரங்களால் ஹோமம் செய்யது, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கடம் புறப்பட்டு மேள, தாள, வாத்திய, இன்னிசை கச்சேரிகள் வேதங்கள் முழங்க கடத்திர்கு பூக்கள் தூவப்பட்டு சாமி சன்னதியை வலம் வந்து ஐயாரப்பர் மூலவருக்கு சிறப்பு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வானது தர்மபுர ஆதீனம் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் நிர்வாக அலுவலர் அகோரமூர்த்தி மற்றும் ஆனந்தன், திருக்கோவில் பணியாளர்கள் ஏற்பாடுகள் சிறப்பாக செய்திருந்தனர். ஹோமத்தில் சுமார் 25 சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.