பதிவு செய்த நாள்
30
ஜன
2022
07:01
நாளை 31.1.2022, திங்கள்கிழமை தை அமாவாசை தினம்.திங்கள் காலை 1.58 முதல் செவ்வாய் கிழமை பகல் 12.02 வரை அமாவாசை திதி. திங்கள் கிழமை இரவு முழுவதும் அமாவாசை இருப்பதால் திங்கள் கிழமை அன்று காலையில் திதி கொடுக்கலாம். சதுர்த்தசி மற்றும் அமாவாசையில் இறந்தோருக்கும் பிற திதிகளில் இறந்து இவ்வாண்டு செய்யாமல் விடுபட்ட முன்னோர் தர்பணமும் நாளை திங்கள் கிழமை காலையில் ஏதேனும் கடல்/ஆறு/குளக்கரையில் செயலாம்.
நம் முன்னோர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நமக்கும் நமது சந்ததியினருக்கும் பல அசுப பலன்களை தருவதைப் போல முன்னோர்கள் இறந்த திதி அன்று ஆண்டு தோறும் உங்களுக்கு அவர்களை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்களுக்கு உரிய முன்னோர் சிரார்த்தத்தை செய்ய வேண்டும். ஆண்டு தோறும் அவர்களுக்கு உரிய உணவை நாம் அளிக்காமல் இறந்த முன்னோர்கள் ஏமாற்றம் அடைந்தால் திருமணத்தடை,தொழில் தடை அல்லது வேலையின்மை, குழந்தை பாக்கிய தடை, நங்கா வறுமை, அகால மரணம், தரா நோய், எண்ணிய காரியம் நிறைவேறாமை, போன்ற அசுப பலன்கள் தருகிறது. இறந்த திதி அன்று சிரார்த்தம் கொடுக்க இயலாதவர்கள் ஆடி,புரட்டாசி,தை மாதங்களில் வரும் அமாவாசையில் ஏதேனும் ஓரு அம்மாவாசையில் சிரார்த்தம் செய்யலாம். தாய்,தந்தையை குறிக்கும் சூரியன்,சந்திரன் இணைந்த நாளே அம்மாவாசை ஆகும். ராகு பாட்டனாரையும், கேது பாட்டியையும் குறிக்கும் கிரகம்.
திருவள்ளுவர் மூத்தோர் கடன் பற்றி அன்றே திருக்குறளில் தெளிவாக தெரிவித்துள்ளார். காஞ்சி பெரியவர் வாழ்வில் முன்னேற மூத்தோர் கடனும்,குலதெய்வ வழிபாடும் இரண்டு கண்கள் போன்றது என்று தெரிவித்து உள்ளார். மாதம் தோறும் அம்மாவாசை தினத்தன்று முன்னோர்களை நினைத்து வீட்டில் கோலமிடாமல் வழிபட வேண்டும். சாமிப் படத்துடன் இறந்த முன்னோர் படங்களை வைத்து வழிபட கூடாது. திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பெளர்ணமி ஆக மாற்றி நிகழ்வும் தை அமாவாசை அன்று நிகழ்ந்தது, பிதுர் காரியத்தை செய்யாமல் விட்ட அனைவரும் தை அம்மாவாசை தினத்தில் பிதுர் சிரார்த்தத்தை செய்து வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.