காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் மாசிமகப்பிரம்மோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் ரிஷபக் கொடியேற்றுதல் விழா துவக்கியது.8ம் தேதி சூரியப்பிறையில் சுவாமி வீதியுலா,கடந்த 9ம் தேதி சந்திரப்பிறை நடந்தது.இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தியாகராஜர் புறப்பாடு வசந்த உற்சவம் நிகழ்ச்சி நடந்தது.நேற்று மாசிமகப்பெருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா நடந்தது.தேரில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருள அருள்பாலித்தார்.இன்று ஸ்ரீநடராஜர் தீர்த்தவாரி மற்றும் பெருவிழா நடைபெறுகிறது.இதில் தொகுதி எம்.எல்.ஏ., நாகதியாகராஜன் பா.ஜ.க.,பிரமுகர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.