பதிவு செய்த நாள்
21
பிப்
2022
12:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மாசி மாதம் சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், மாலை, 5:00 மணிக்கு ேஹாமம், 5:30 மணிக்கு அபிேஷகம், மாலை, 6:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்தனர். தெப்பக்குளம் ராஜகணபதி கோவில், திப்பம்பட்டி சிவசக்தி கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று மாலை, 6:30 மணிக்கு விநாயகருக்கு அபிேஷக பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது.பூஜையில், சுமங்கலி பாக்கியத்துக்கு பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். சங்கடம் போக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தன.