Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேத பாராயணம் மற்றும் மகா ருத்ரம், ... பருவ மழை வேண்டி களம் எழுத்து பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் பணியாளர்கள் இடமாறுதல் விதி திருத்தத்திற்கு எதிராக வழக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2022
04:02

 மதுரை : கோயில் பணியாளர்களை இடமாறுதல் செய்ய அறநிலையத்துறை கமிஷனருக்கு அதிகாரம் வழங்கி விதியில் திருத்தம் செய்ததற்கு எதிராக தாக்கலான வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தமிழ்நாடு முதுநிலை தரக் கோயில் பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சுதர்சனம் தாக்கல் செய்த மனு: அறநிலையத்துறை பணியாளர்களை இடமாறுதல் செய்ய கமிஷனருக்கு அதிகாரம் வழங்கி விதி திருத்தம் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் அறநிலையத்துறை கமிஷனர் ஜன.,25 ல் வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.விதிகள்படி கோயில் பணியாளர்களை கட்டுப்படுத்துதல், இடமாறுதல் செய்யும் அதிகாரம் அறங்காவலர்களுக்கு உள்ளது. கமிஷனருக்கு அதிகாரம் அளித்து விதி திருத்தம் மேற்கொண்டது அறநிலையச் சட்டத்திற்கு முரணானது. விதி திருத்தம் , வழிகாட்டுதல்கள்படி மேல்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு சுதர்சனம் குறிப்பிட்டார். பிப்.,4 ல் நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.

நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு நேற்று விசாரித்தது.தமிழக அரசுத் தரப்பு: கோயில் வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு சிறப்பு அமர்வு 75 வழிகாட்டுதல்களை பிறப்பித்தது. அதனடிப்படையில் கமிஷனருக்கு அதிகாரம் அளித்து விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அரசு 35 வழிகாட்டுதல்களை ஏற்றுள்ளது. 32 வழிகாட்டுதல்கள் தொடர்பாக விளக்கம் கோரி சிறப்பு அமர்வில் மனு செய்யப்பட்டுள்ளது. பிப்.,25 ல் சிறப்பு அமர்வு விசாரிக்கும் என தெரிவித்தது. நீதிபதிகள்: இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்விற்கு மாற்றப்படுகிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar