தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா; பால்குடம் எடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2026 10:03
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள்,தீச்சட்டிகள், பால்குடங்கள் எடுத்து வழிபாடு செய்தனர்.
மானாமதுரை தயாபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 16ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து விரதமிருந்து வந்த பக்தர்கள் தினம் தோறும் இரவு கோயில் முன்பாக கும்மி பாட்டு பாடி அம்மனை வழிபட்டு வந்தனர்.நேற்று பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பூஜாரி சுப்பிரமணியன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் வைகை ஆற்றுக்குச் சென்று அங்கிருந்து பால்குங்கள்,தீச்சட்டிகள்,சுவாமி உருவங்கள் ஆகியவற்றை தலைசுமையாக எடுத்துக்கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்து கோயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கினர். பின்னர் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.முன்னதாக அம்மனுக்கு 18 வகையான மூலிகைப் பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றது. கோயில் முன்பாக அன்னதானம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டிகள் சுப்பிரமணியன், நாகராஜன்,முருகன் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.