Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ... தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா; பால்குடம் எடுத்து வழிபாடு தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி சேவை; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி சேவை; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

25 மார்
2026
10:03

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிமாத பெருவிழாவின் மூன்றாம் நாள், அம்பாளுடன் சுவாமி அதிகார நந்தி வாகனத்தில், மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்படும் ஐந்து வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பது. கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளதால் அதிகார நந்தி என பெயர் வந்தது. சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகே இந்த அதிகார நந்தி அமைக்கப்பட வேண்டும் என, சிவ ஆகமங்கள் கூறுகின்றன. 


கயிலையில் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக, திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவதரிசனத்திற்கு திருமால் சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். திருமால் திரும்பிவர காலதாமதம் ஆனது. அப்போது, நந்திதேவன் அனுமதியின்றி கருடன் உள்ளே செல்ல முயன்றார். இதனால், இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார். தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். திருமால், சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் கோரினார் என்பது புராணம். எனவே, சிவ ஆலயங்களில் அதிகார நந்திக்கென வாகனம் உண்டு. திருவிழாக்காலங்களில் சிவபெருமான் இந்த அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வருகிறார். அதிகார நந்தி சேவையை தரிசிக்கும் பக்தர்கள், கைலாசத்தில்சிவ தரிசனம் செய்வதற்கு சமமானது என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க இந்த அதிகாரநந்தி சேவை இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்ஐ கொண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழாவில் 29ம் தேதி தேரோட்டமும், 30ம் தேதி அறுபத்து மூவர் உத்சவமும் நடக்க உள்ளன.


வாகனங்களுக்கு தடை; அதிகாரநந்தி, அறுபத்து மூவர் திருவிழாவின் போது சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில், வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி கோவை ஆர் எஸ் புரம் காமாட்சி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வேட்டைக்காரன் சுவாமி திருவிழாவில்,50 கிடாய்கள் வெட்டி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar