Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மரணபயம் இனி இல்லை சப்தரிஷி பூஜை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கைலாயத்தை தரிசித்த பலன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2022
11:03


சைவமும், தமிழும் ஒரே சேரத் திகழும் சிவத்தலம் சிவகங்கை மாவட்டம் வேம்பத்துார். இங்கு குடியிருக்கும்  கைலாசநாதரை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும். இக்கோயிலில் சிவனடியார்களின் முயற்சியால் மார்ச் 6ல் கும்பாபிேஷகம் நடக்கிறது.  
மதுரையை ஆட்சி செய்த மன்னர் மலையத்துவஜ பாண்டியன் குழந்தை வரம் வேண்டி கயிலாய யாத்திரை புறப்பட்டார். இத்தலத்தை அடைந்த போது ‛மனமே கயிலாயம்’ என வானில் அசரீரி கேட்க, மன்னருக்கு கயிலாயத்தை தரிசித்த மனநிறைவு கிடைத்தது. அதனடிப்படையில் இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி கைலாசநாதர் என்றும், அம்மன் ஆவுடையநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.   
மன்னரின் மனைவியான காஞ்சனமாலையால் கைலாசநாதர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மீனாட்சியம்மனின் பக்தரும், சவுந்தர்யலஹரி ஸ்தோத்திரத்தை தமிழில் பாடியவருமான வேம்பத்துார் வீரகவிராஜ பண்டிதர், காசி யாத்திரை சென்ற போது மதுரை மீனாட்சியம்மனே மகள் வடிவில் அவருடன் சென்றதாக திருநெல்வேலி காந்திமதி பிள்ளைதமிழ் குறிப்பிடுகிறது. 1945ல் பிரவலுார் சின்னக்கருப்ப மேஸ்திரியின் மனைவி ஒய்யம்மாள் இக்கோயிலின் கும்பாபிேஷகத்தை நடத்தினார்.  
வேம்பற்றுார் என்னும் இந்த ஊரின் பெயர் தற்போது வேம்பத்துார் எனப்படுகிறது. கைலாச நாதர் கிழக்கு நோக்கியும், ஆவுடையநாயகி தெற்கு நோக்கியும் அருள்புரிகின்றனர். வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு நெய் தீபமேற்றி வழிபட கிரகதோஷம் விலகும். அவ்வையார், கம்பர், காளமேகப்புலவர், ஒட்டக்கூத்தர், கபிலர் ஆகியோர் இக்கோயிலில் உள்ள புதன் பகவானை வழிபட்டு கவிபாடும் ஆற்றல் பெற்றனர். சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் புதனை வழிபட்டால் கல்வியில் வளர்ச்சி, கவித்துவம் உண்டாகும். இங்குள்ள பிரம்மாவை தரிசிக்க முற்பிறவியில் செய்த தீவினை மறையும். இந்திரமயிலில் வீற்றிருக்கும் முருகனுக்கு பால் அபிேஷகம் செய்து வழிபட நீண்டநாள் நோய் கூட பறந்தோடும்.  
செல்வது எப்படி
மதுரையில் இருந்து (ராமேஸ்வரம் ரோடு) திருப்பாச்சேத்தி வழியாக 42 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar