Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேச்சியம்மன் கோயிலில் வாஸ்து பூஜை அரியலுார் அருகே மயான கொள்ளை திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளித்தலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2022
04:03

குளித்தலை அருகே மேல் நங்கவரத்தில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேல் நங்கவரத்தில் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலை புணரமைத்து கும்பாபிஷேகம் செய்ய கிராம பொது மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவு செய்து கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று கும்பாபிஷேக விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. முன்னதாக விரதம் மேற்கொண்ட கிராம பொதுமக்கள் நேற்று காலை பெருகமணி காவிரி ஆற்றில் இருந்து மேளதாளத்துடன் புனித நீர் எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகவேள்வி சாலையில் புனித கும்பத்திற்கு சிவாச்சாரியார்கள் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, சிறப்பு யாக வேள்வி பூஜைகள் அர்ச்சனை, ஆராதனைகள் செய்தனர். இன்று காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் யாக வேள்வி சாலையில் இருந்த புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனையும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பின்பு கோவில் கருவறையில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு அபிஷேக ,ஆராதனையும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்கு நங்கவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொது மக்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் விழாக்குழுவின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar