Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புருஷா மிருக வாகனத்தில் மயிலாப்பூர் ... பழநி பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்: பக்தர்கள் பரவசம் பழநி பங்குனி உத்திர விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரங்கநாதர் கோவில் தேரை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
அரங்கநாதர் கோவில் தேரை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

12 மார்
2022
02:03

மேட்டுப்பாளையம்:  காரமடை அரங்கநாதர் கோவில், தேர் திருவிழா நிறைவடைந்ததை அடுத்து, தேரை சுத்தம் செய்து, பாதுகாப்பு கவசம் அணிவிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் மாசிமகத் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 17ம் தேதி தேரோட்டம் நடந்தது. தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வரும்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், தேர் மீது வாழைப்பழங்களை வீசி, வேண்டுதல் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் தேர் மீது சுற்றிலும் நடந்து செல்லும் பகுதி முழுவதும், வாழைப்பழங்கள் நிறைந்திருந்தது. பக்தர்கள் பழத்தை வீசிய வேகத்தில், பழம் சேதமடைந்து வெய்யிலில் காய்ந்தது. தேர் திருவிழா முடிந்த பின்பு, தேரை சுத்தம் செய்து, அதற்கு பாதுகாப்பு கவசம் போடுவது வழக்கம். தேர் அலங்காரம் கடந்த, 2ம் தேதி பிரிக்கப்பட்டது. அதன் பின்பு தேரை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணிகள் நேற்று நடந்தன. இதுகுறித்து கோவில் அலுவலர்கள் கூறுகையில், தேர்த்திருவிழா முடிந்த பின்பு, தேர் மீது உள்ள பழங்கள் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி கழுவி, நன்கு காய வைப்பது வழக்கம். அதன்பிறகு தேரைச் சுற்றி இரும்பு தகரத்தால் பாதுகாப்பு கவசம் போடப்படும். அதற்கான பணிகள் நடைபெறுகின்றன, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி சன்னதியில் ஐப்பசி பவுர்ணமியை ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை ... மேலும்
 
temple news
அன்னூர்; வருகிற 12ம் தேதி ஜென்மாஷ்டமி விழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
பகவானின் தரிசனத்தை அடைய தேவையான தகுதி என்ன? பகவான் இன்று நம்மை அன்புடன் விளக்கி ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar