Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரகாளியம்மன் பொங்கல் பூச்சாட்டு ... பொன்காளியம்மன் கோவில் விழா:  தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு பொன்காளியம்மன் கோவில் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் கோவிலில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் பணி தொடக்கம்
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் கோவிலில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் பணி தொடக்கம்

பதிவு செய்த நாள்

25 மார்
2022
08:03

மயிலாடுதுறை : திருக்கடையூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததால் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் கும்பாபிஷேகம் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நேற்று மாலை தொடங்கியது. இன்று காலை ஏழு முப்பது மணிக்கு விசேஷ சாந்தியுடன், 2ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் பூர்ணாஹூதி மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து குருமகாசந்நிதானம் முனையில் ராஜகோபுரம், விநாயகர், சுவாமி, அம்பாள், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தும் பணியும், சுவாமி விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் பணியும் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் திருநாவுக்கரசு தம்பிரான், திருஞானசம்பந்த தம்பிரான், மாணிக்கவாசக தம்பிரான் மற்றும் ஆதீன கோவில்களின் மேலாளர் மணி,  கோவில் கேசியர் ஸ்ரீராம் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar