Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை கோயிகளில் திருப்பணிகள், ... திருத்தணிகை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் படிவழி பாதை அமைக்க பூமி பூஜை திருத்தணிகை சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2022
04:04

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதியுடன் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையன்று கோவில் முன்புள்ள ஊஞ்சல் மண்டபத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் வளாகத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.  2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கி பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது. அதை முன்னிட்டு அன்று அதிகாலை அம்மனுக்கு விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்தனர்.இரவு 12 மணிக்கு மேளதாளம் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். நுாற்றுக்காணக்கான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இரவு 1 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தின் நிறைவாக மகா தீபாராதனை நடந்தது. இதில் விழுப்புரம் கலெக்டர் மோகன், எஸ்.பி., ஸ்ரீநாதா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கியதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில், ஸ்ரீவாரிப் பெருமானின் வருடாந்திர வசந்தோற்சவம் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தது. சென்னை, ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar