Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பாலக்காட்டில் அதிருத்ர மகாயக்ஞம் ...  மண்ணுக்குள் புதைந்திருந்த கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு மண்ணுக்குள் புதைந்திருந்த கொற்றவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரு ஸ்தலமான பெருஞ்சேரி வாக்கிஸ்வரர் கோவிலில் மார்கழி தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
குரு ஸ்தலமான பெருஞ்சேரி வாக்கிஸ்வரர் கோவிலில் மார்கழி தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

26 டிச
2025
04:12

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி வாக்கிஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் இராண்டாம் வியாழக்கிழமையான இன்று எமகண்டத்தில் கோவில் ஞான தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி மற்றும் சாமி வீதி உலா நடைபெற்றது திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்;


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெருஞ்சேரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட 1500 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ சுவாதந்தர நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ வாகீஸ்வரர் ஆலயம் உள்ளது. பஞ்ச குரு தலங்களில் ஒன்றாகும். மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதரை வியாழன் வழிபட்டுதேவர்களுக்கெல்லாம் தலைவராக வரம் கேட்டார். அவரை, மாயூரநாதர் பெருஞ்சேரி கிராமம் சென்று ஈசனை பிரதிஷ்டை செய்து வணங்கினால் அருள் கிடைக்கும் என்று மாயூரநாதர் அருளியதால், பெருஞ்சேரியில் வியாழன் சுவாதந்தர நாயகி உடனாகிய வாகீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம்.  சரஸ்வதிதேவி தன் பெயரால் லிங்கம் அமைத்து விதிப்படி பூசித்து தட்சன் யாகத்தில் வீரபத்திரனால் இழந்த மூக்கினை பெற்று வாக்கு வன்மையும் பெற்ற தலமாக போற்றப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் ஒவ்வொரு வியாழக்கிழமை குருஓரை எமகண்டத்திலும் கோவில் ஞான தீர்த்த குளத்தில் குருவாரம் தீர்த்தவாரி நடைபெறவது வழக்கம். 


அந்த வகையில் இந்தாண்டு மார்கழி மாதம் இராண்டாம் வியாழக்கிழமையான இன்று எமகண்டத்தில் குருஓரையில்  கோவில் ஞான தீர்த்த குளத்தில் அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து தீர்த்தவாரி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு வீதி உலா நடைப்பெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar