Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காட்டில் அதிருத்ர மகாயக்ஞம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரு ஸ்தலமான பெருஞ்சேரி வாக்கிஸ்வரர் கோவிலில் மார்கழி தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
குரு ஸ்தலமான பெருஞ்சேரி வாக்கிஸ்வரர் கோவிலில் மார்கழி தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

26 டிச
2025
04:12

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி வாக்கிஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் இராண்டாம் வியாழக்கிழமையான இன்று எமகண்டத்தில் கோவில் ஞான தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி மற்றும் சாமி வீதி உலா நடைபெற்றது திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்;


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெருஞ்சேரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட 1500 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ சுவாதந்தர நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ வாகீஸ்வரர் ஆலயம் உள்ளது. பஞ்ச குரு தலங்களில் ஒன்றாகும். மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதரை வியாழன் வழிபட்டுதேவர்களுக்கெல்லாம் தலைவராக வரம் கேட்டார். அவரை, மாயூரநாதர் பெருஞ்சேரி கிராமம் சென்று ஈசனை பிரதிஷ்டை செய்து வணங்கினால் அருள் கிடைக்கும் என்று மாயூரநாதர் அருளியதால், பெருஞ்சேரியில் வியாழன் சுவாதந்தர நாயகி உடனாகிய வாகீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம்.  சரஸ்வதிதேவி தன் பெயரால் லிங்கம் அமைத்து விதிப்படி பூசித்து தட்சன் யாகத்தில் வீரபத்திரனால் இழந்த மூக்கினை பெற்று வாக்கு வன்மையும் பெற்ற தலமாக போற்றப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் ஒவ்வொரு வியாழக்கிழமை குருஓரை எமகண்டத்திலும் கோவில் ஞான தீர்த்த குளத்தில் குருவாரம் தீர்த்தவாரி நடைபெறவது வழக்கம். 


அந்த வகையில் இந்தாண்டு மார்கழி மாதம் இராண்டாம் வியாழக்கிழமையான இன்று எமகண்டத்தில் குருஓரையில்  கோவில் ஞான தீர்த்த குளத்தில் அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து தீர்த்தவாரி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு வீதி உலா நடைப்பெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோயிலில், வருகிற, 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்க வாசல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar