செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு 7 மணிக்கு வில்லுப்பாட்டு மற்றும் பட்டிமன்றம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.