பழநி ரெணகாளிஅம்மன் கோயிலில் முகூர்த்த கால் நாட்டுதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2026 10:04
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் நாட்டுதல் நடந்தது.
பழநி ரெணகாளியம்மன் கோயில் புது தாராபுரம் சாலையில் உள்ளது. 2025,ஆக.,ல் பாலாலயம் நடந்தது. கோயில் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏப்.12ல் முகூர்த்த கால் நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏப்.27., மாலை 6:00 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, இறைஅனுமதி பெறுதல் நடக்கும். ஏப்.28., மாலை முதற்கால யாக பூஜை நடைபெறும். ஏப்.29., காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடக்கும். ஏப்.30., காலை 7:35 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜை நடைபெற்று, காலை 9:30 மணிக்கு மேல் யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் எடுத்து வரப்படும். அதன் பின் காலை 9:45 மணிக்கு மேல் ரெணகாளியம்மன் கோயில், மற்றும் பரிவார தெய்வங்களான கன்னிமூல விநாயகர், ரெணகருப்பன் சுவாமி சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடைபெறும். கோயில் நிர்வாகம் விழா ஏற்பாடுகளை செய்து வருகிறது.