கொட்டாம்பட்டி: கம்பூர் ஊராட்சி சின்னகற்பூரம்பட்டி மந்தையம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் வைந்தானை அடித்தல், கும்மி கொட்டுதல், ஒயிலாட்டம் ஆடினர். இவ் விழாவில் அலங்கம்பட்டி, பெரிய, சின்னகற்பூரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.