ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2022 07:04
ஆலங்குடி: கும்பராசியிலிருந்து மீனத்திற்கு இன்று (ஏப்.14) அதிகாலை 4;16 மணியளவில் குருபகவான் இடம் பெயர்ந்தார். இதையொட்டி திருவாரூர் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உள்ள குருபகவான் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. தங்கக்கவசம் அணிந்து குருபகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். குருப்பெயர்ச்சியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலங்குடியில் குருபகவானை வணங்கி வழிபட்டனர்.