திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டிய ராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தாரைவார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து நேற்று புறப்பாடாகினர்.
இன்று (ஏப். 14) அதிகாலை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருள்வர். மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சித்திரை வீதிகளில் பட்டினப் பிரவேசம் முடிந்து கோயிலுக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும். பெற்றோர் திருக்கல்யாணம், பூப்பல்லக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏப். 16ல் மதுரை சுவாமிகளிடம் திருப்பரங்குன்றம் சுவாமிகள் விடைபெற்று ஏப்.17ல் திருப்பரங்குன்றம் கோயில் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் கோயில் நடை வழக்கம்போல் திறந்திருக்கும். என கோயில் துணை கமிஷனர் கலைவாணன் தெரிவித்தார்.