செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் ஆட்சீஸ்வரர்திருக்கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. கோவிலில் புதியதாக அம்மன் தேர் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. அனைத்து பணிகளும் முடிந்து புதிய தேர் வெள்ளோட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புதிய தேர்வெள்ளோட்டத்திற்காககோவில் வளாகத்தில், கடந்த 3ம் தேதி, யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 2 நாட்களாக வேத பாராயணம், திருமுறை பாராயணம், விசேஷ ஹோமங்கள் மற்றும் மூன்று கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, மகாதீப ஆராதனை நடந்தது. யாகசாலையில் வைத்து பூஜைக்கப்பட்ட புனித நீரால் அம்மன் திருத்தேருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 10:15 மணிக்கு புதியதேரின் வடத்தை பிடித்து ஆட்சீஸ்வரனுக்கு அரோகரா, இளங்கிளி அம்மனுக்கு அரோகரா, என கோஷமிட்டபடி பக்தர்கள் இழுத்தனர். நான்கு மாட வீதிகளிலும் வளம் வந்து, நிலையை வந்தடைந்தது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.