நளன் குளத்தில் துணி ஏலம் வாரம் தோறும் விட கோவில் நிர்வாகம் நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2022 11:04
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு நளன் குளத்தில் உள்ள துணிகளை வாரம் ஏலம் விட கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்றது. நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் தினம் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக நளன் குளத்தில் குளித்துவிட்டு பின்னர் அவர்கள் அணிந்திருக்கு ஆடைகளை குளத்தில் வீட்டு விட்டு மாற்று துணி அணிந்துகொண்டு நளன்குளம் அருகில் உள்ள விநாயகரை தரிசனம் மேற்கொண்டப் பின்னர் பகவானை தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் நளன் குளத்தில் விடும் துணிகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடுவது வழக்கம் ஆனால் கடந்த இருஆண்டுகளாக நோய் தொற்று காரணமாக பக்தர்கள் குளத்தில் குளிக்க அனுமதி இல்லை தற்போது இயல்பு நிலை திரும்பியப் பின்னர் குளத்தில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் குளத்தில் விடும் ஆடைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடப்பட்ட நிலையில் தற்போது கோவில் நிர்வாகம் வாரம் தோறும் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.நேற்று முன்தினம் கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்ட இதன் மூலம் பக்தர்கள் விட்டுசெல்லும் துணி ஏலம் மாதம் ரூ.3.50லட்சம் மதிப்பில் வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் பக்தர்கள் நளன் குளத்தில் விட்டுசெல்லும் துணிகளை குளக்கரையில் உள்ள இரும்பு கூண்டில் ஆடைகளை விட்டு செல்ல வேண்டும் மேலும் துணிகளை குளத்தில் தண்ணீரில் விடக்கூடாது இதனால் தண்ணீர் மாசுதன்மை ஏற்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.