பிரான்மலை கோயில் சித்திரைத் தேரோட்டம் நாளை (ஏப்.15) நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2022 07:04
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை உடனாய திருக்கொடுங்குன்ற நாதர் கோயில் சித்திரைத் தேரோட்டம் நாளை நடக்கிறது. சங்க இலக்கியத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இக்கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.7 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக நடக்கும் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் இறைவன் இறைவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். 9ம் திருவிழாவான நாளை (ஏப். 15) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 5:00 மணிக்கு பிரியாவிடையுடன் திருக்கொடுங்குன்ற நாதர் பெரிய தேரிலும், குயிலமுதாம்பிகை அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர். காலை 6:30 க்கு தேரோட்டம் தொடங்குகிறது. நான்கு ரத வீதியில் வலம் வரும் தேர் மாலை 4:00 மணிக்கு மேல் நிலையை அடையும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடப்பதால் பிரான்மலை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.