கமுதி: கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் இருளாயி அம்மன், கருப்பணசாமி கோயில் முதலாம் ஆண்டு வருடா பிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயிலை வலம் வந்து மூலவருக்கு கும்பநீர் அபிஷேகம் நடந்தது.
இருளாயி அம்மன், கருப்பணசாமிக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கமுதி, மதுரை, அருப்புக் கோட்டை, ராமநாத புரம் உட்பட பல்வேறு பகுதியில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கோவிலாங் குளம் ஆச்சாரியார் உறவின் முறையினர் செய்தனர்.