திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2022 03:04
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பொது சேவை, 11:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மூலஸ்தானத்தில் பஞ்சாங்கம் வாசித்தலும், தொடர்ந்து 6:00 மணிக்கு தேகளீச பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி வீதி புறப்பாடு நடந்தது. ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாசாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து மூலவர் உலகளந்த பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.