Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்துார் இருக்க வேற ஊர் எதற்கு யாருக்கும் வாழ்வுண்டு.. அதற்கொரு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோடி புண்ணியம் சேர... திருக்கோகர்ணம் போங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2022
10:04

பசுவின் உடம்பில் சகல தெய்வங்களும் இருக்கின்றனர். முக்கியமாக மகாலட்சுமி அதன் பின்புறத்தில் வசிக்கிறாள். பசுவைக் கண்டாலும், தொட்டு வணங்கினாலும் பாவம் தீரும். புனிதமான பசு இனத்தைச் சேர்ந்த காமதேனு வழிபட்ட சிவன், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் உள்ளார். இவரை தரிசித்தால் கோடி புண்ணியம் சேரும்.  
ஒருநாள் தேவலோகத்தில் இந்திர சபை கூடியது. காமதேனுவைத் தவிர மற்றவர்கள் வந்து விட்ட நிலையில் கோபம் அடைந்த இந்திரன், ‘‘ தாமதமாக வந்த நீ பூலோகத்தில் காட்டுப்பசுவாக பிறக்கக் கடவது’’ எனச் சாபமிட்டார். காட்டுப்பசுவாக பிறந்த அது காதுகளில் தீர்த்தம் எடுத்து வந்து தினமும் சிவனுக்கு அபிஷேகம் செய்தது. ‘காது’  என்பதை ‘கர்ணம்’ என்றும், பசு என்பதை ‘கோ’ என்றும் சொல்வர். இதனால் இத்தலம் ‘கோ கர்ணம்’ எனப்பட்டது.  
பசுவை சோதிக்க விரும்பிய சிவன், ஒருமுறை காட்டுவழியில் புலி வடிவில் தோன்றி தடுத்தார். ‘‘ சிவனை தரிசிக்கச் செல்லும் என்னை தடுக்காதே! பூஜை முடித்து வந்ததும் உனக்கு இரையாகிறேன். சிவன் மீது சத்தியம்’’ என்றது. புலியும் சம்மதிக்கவே பசு புறப்பட்டது.  வாக்கை நிறைவேற்ற சிறிது நேரத்திலேயே பசு திரும்பி வந்தது. மகிழ்ந்த சிவன், தனது புலி வடிவத்தை மறைத்து சிவலிங்கமாக காட்சியளித்தார். இவரே ‘கோகர்ணேஸ்வரர்’ என்னும் பெயரில் இங்கு இருக்கிறார். பிற்காலத்தில் பிரகதாம்பாள் அம்மனுக்கு சன்னதி எழுப்பப்பட்டது.
மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்ட குகைக்கோயில் இது. நுழைவு வாசல் தெற்கு நோக்கியும், சன்னதிகள் கிழக்கு நோக்கியும் உள்ளன. விநாயகர் சன்னதியை அடுத்த மண்டபத்தில் காமதேனுவின் சிவபூஜை,  ராமாயண சம்பவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. நாயன்மார் சன்னதியில் ரிஷப வாகன சிவனைத் தரிசிக்கலாம். மகிழவனேஸ்வரர், மங்கள நாயகி, நடராஜர், தட்சிணாமூர்த்திக்கு சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: புதுக்கோட்டையில் இருந்து 3 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar