Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தர்களின் பெருமை கோடி புண்ணியம் சேர... ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்துார் இருக்க வேற ஊர் எதற்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2022
10:04


எல்லா உயிர்களுக்கும் பொதுவானது பசி. அதன் கொடுமை அனுபவித்தவருக்கே தெரியும். பசி, பட்டினி இல்லாமல் வாழும் நாட்டில் தான் ஒழுக்கம் இருக்கும். ஏனெனில் அங்குள்ள மக்கள் தவறான வழிகளில் செல்ல மாட்டார்கள். பசியை அழிக்கும் வலிமை பெற்றவள் அன்னபூரணி. இவளுக்கு மத்திய பிரதேசத்தில் உள்ள இந்துாரில் கோயில் உள்ளது. இங்கு வருவோருக்கு ‘இந்துார் இருக்க மற்ற ஊர் எதற்கு’ என்னும் எண்ணம் ஏற்படும்.    
ஒரு சமயம் பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மூட உலகமே இருண்டது. கோபம் கொண்ட சிவனின் சாபத்தால் பார்வதி முகப்பொலிவை இழந்தாள். அவள் விமோசனம் வேண்ட ‘‘காசியில் சத்திரம் அமைத்து அடியார்களுக்கு அன்னதானம் செய். முகம் பொலிவு பெறும்’’ என்றார் சிவன். அதைப் பின்பற்றி சாபம் நீங்கப் பெற்று ‘அன்னபூரணி’ என அழைக்கப்பட்டாள். தென்னிந்திய பாணியில் இவளுக்கு இங்கு கோயில் கட்டப்பட்டது. இது 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. கோபுரத்தின் உயரம் 100 அடி.
வாசலின் இருபுறமும் கருப்பு நிற பளிங்கு கல் யானைகள் உள்ளன.  உள்ளே நுழைந்தவுடன் பிரம்மாண்ட மண்டபம், அதனையடுத்து கருவறையில் துர்கை, சரஸ்வதி, அன்னபூரணி சன்னதிகள் உள்ளன. அன்னபூரணியின் அருகில் அன்ன பாத்திரமும், கரண்டியும் உள்ளன.
தீபாவளியன்று தங்க பாத்திரத்தில் தங்க கரண்டியுடன் அம்மனை தரிசிக்கலாம். அன்று நடக்கும் ‘அன்னகூட்’ என்னும் உற்ஸவத்தில் இனிப்பு, கார வகைகள் ஏராளமாக தயாரிக்கப்பட்டு  நைவேத்யம் செய்யப்படும். வடஇந்தியாவில் பார்வதியை விட அவளது அம்சமான துர்கைக்கே முதலிடம் தரப்படுகிறது. அவளுக்கு வலதுபுறம் காளியும், இடதுபுறம் சரஸ்வதியும் உள்ளனர்.  
இங்கு 15 அடி உயர வெள்ளை சலவைக் கல்லால் ஆன சிவன் இருக்கிறார். பிரகாரத்தில் கிருஷ்ணரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை ஓவியங்களாக தீட்டியுள்ளனர்.
எப்படி செல்வது
சென்னையில் இருந்து இந்துார் 1494 கி.மீ., அங்கிருந்து 5 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar