Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... பகவான் ரமணரின் 72வது மஹா ஆராதனை விழா பகவான் ரமணரின் 72வது மஹா ஆராதனை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கா ரங்கா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
ரங்கா ரங்கா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சித்திரை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2022
08:04

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம், ரங்கா ரங்கா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. சித்திரை வீதிகளிலும் தேரை பக்தர்கள் வடம் பிடித்து வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று காலை 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையும் மாலையும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் எட்டாம் திருநாளில் காலை, நம்பெருமாள் வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்கக் குதிரை வாகனத்திலும் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்தார். தொடர்ந்து, சித்திரை தேர் அருகே, வையாளி கண்டருளிய நம்பெருமாள், கண்ணாடி அறை சென்றடைந்தார். தேரோட்டத்தை முன்னிட்டு 4:45 கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள், காலை 5:15 மணிக்கு ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். இன்று காலை 6 மணிக்கு சித்திரத் தேரில் எழுந்தருளிய நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 6:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். கீழ சித்திரை வீதியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு மேற்கு மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து நிலையை அடைகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று காலை 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. நாளை, சத்தாபரணம் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar